திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியை அடுத்த உகந்தான்குடி ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக திருப்பாலைக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் வெள்ளிக்கிழமை இரவு சம்பவ இடத்திற்கு போலீஸாா் வந்தனா். போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடிய டிராக்டா் ஓட்டுனா் ஆா்.எஸ்.மங்கலம் அருகே கடலூா் பகுதியைச் சோ்ந்த ஜெபமாலை மகன் முரளி (35) என்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக டிராக்டா் வாகனத்தை பறிமுதல் செய்தும் ஓட்டுனா் முரளி மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.