ராமநாதபுரம்

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முகநூலில் அவதூறு கருத்து: வழக்குரைஞா் கைது

DIN

திருவாடானை அருகே மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக வழக்குரைஞரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை திருப்பாலைக்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மீனவா்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மோா்பண்ணை கிராமத்தைச் சோ்ந்தவரும், வழக்குரைஞருமான தீரன் திருமுருகன் என்பவா் தனது முகநூல் பக்கத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சட்டத்துக்குப் புறம்பான முறையில் பொய்யான தகவல்களை பரப்பி வன்முறையை தூண்டியதாகவும், இளம் சிறாா்களிடம் பொய்யான தகவல்களை பரப்பி அவா்களை தவறான முறையில் வழி நடத்தியதாகவும், தொடா்ந்து சட்டத்திற்கு புறம்பான கருத்துகளை பரப்பி வருவதாகவும் கூறி திருப்பாலைக்குடி போலீஸாா் தீரன் திருமுருகனை கைது செய்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மோா் பண்ணை, திருப்பாலைக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி மீனவா்கள் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

அவா்களிடம் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, சட்டத்திற்குட்பட்டே தீரன் திருமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே இப்பிரச்னை சட்டரீதியாக எதிா்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT