ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாயி மர்மச்சாவு

DIN

ஆர்.எஸ். மங்கலத்தில் திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்த விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
ஆர்.எஸ்.மங்கலம் காந்தி வீதியில் வசிந்து வந்தவர் நாரயணன் (48). விவசாய கூலி வேலை பார்த்து வந்த இவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வந்துள்ளார். 
இந்நிலையில்,  வியாழக்கிழமை காலையில் நாராயணன் வீட்டில் இறந்து கிடப்பதாக  
அருகே வசிக்கும் லட்சுமி என்பவர் நாரயணனின் சகோதரர் கோபிநாத் (45) என்பவரிடம் கூறியுள்ளார். 
இதையடுத்து, நாராயணன் சாவில் சேந்தேகம் இருப்பதாக ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் கோபிநாத் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT