கமுதி, அபிராமத்தில் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால், தெருக்கள், சாலைகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதிபட்டனர்.
கமுதி, அபிராமத்தில் வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு துவங்கிய மழை, மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன்
பெய்தது. இதனால் அபிராமம் சப்பாணி கோயில் தெரு உள்பட சாலைகளில் மழை
நீர் வெளியேற முடியாமல் தேங்கியது.
கழிவுநீர் வாய்க்கால்கள் வழியாக மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கியதால், வீடுகளிலிருந்து வெளியேறவும், வீடுகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிபட்டனர்.
2 மணி நேரம் பெய்த மழைக்கு, வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் விதைப்பு பணிகளில் ஈடுபட்டு, விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.