ராமநாதபுரம்

திருவாடானை அருகே கரோனாவால் இறந்த நபர் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் விபத்து 

DIN

திருவாடானை அருகே அச்சங்குடி கிராமத்தில் கரோனா தொற்றுண்ணீ பாதிக்கப்பட்டு உயிரிழந்த உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோட்டபட்டினத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது திருவாடானை அருகே அச்சகுடியில் ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென கவிழ்ந்தது. 

இதில் வாகன ஓட்டுனர் தேனி மாவட்டம் அள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பா ராஜ் (30) என்பவருக்கு சிறு காயம் ஏற்பட்டது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கரோனா தொற்றுண்ணி பாதிக்கப்பட்டவரின் இறந்த உடல் இருந்ததால் அருகே வருவதற்கு பொதுமக்கள் அச்சம் அடைந்து பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

தகவலறிந்த தொண்டி தமுமுக செயலாளர் ஜிப்ரி தலைமையில் சமூக ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து திருவாடனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களின் சராசரி ஊதியம் ரூ.22 லட்சம்: ஐஐடி சென்னை

வலுக்கும் ஏஐ போட்டி: கூகுளின் புதிய தயாரிப்புகள் வலு சேர்க்குமா?

சாதியைக் குறிப்பிட்டு இழிவான பேச்சு..? சர்ச்சையில் கார்த்திக் குமார்!

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT