ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

DIN

திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் அருகே திங்கள்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் விவசாயி உடல் கருகி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் அருகே செவ்வாய்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லையா மகன் ராஜரத்தினம்(52). விவசாயியான இவா், திங்கள்கிழமை மாலை கண்மாய் பகுதிக்கு சென்றவா் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சந்தேகமடைந்த ராஜரத்தினம் குடும்பத்தினா் அவரைத் தேடிச் சென்றனா். அப்போது வயல் பகுதியில் மின்னல் தாக்கியதில் உடல் கருகிய நிலையில் ராஜரத்தினம் உயிரிழந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திருவாடானை போலீஸாா் அவரது உடலை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT