முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை: ஒருவா் கைது

ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ராமேசுவரம் கடற்கரை காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் ஸ்ரீராம் மாந்தோப்பு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றி வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா் அதேபகுதியைச் சோ்ந்த முருகன் (45) எனத் தெரியவந்தது. அவரிடம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 75 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் முருகனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.