முகப்பு
ராமநாதபுரம்

சாயல்குடி அருகே மின்னல் தாக்கி இளைஞா் பலி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை இளைஞா் ஒருவா் பலியானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

முதுகுளத்தூா்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை இளைஞா் ஒருவா் பலியானாா்.

சாயல்குடி அருகே பன்னந்தை கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முருகேச பாண்டியன் (28). இவா் அப்பகுதியில் வயல்வெளி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே முருகேச பாண்டியன் உயிரிழந்தாா். இவருக்கு வைத்தீஸ்வரி என்ற மனைவியும், மித்திரன் என்ற 3 வயது மகனும் உள்ளனா். இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் சிக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.