முகப்பு
ராமநாதபுரம்

பைக்குகள் மோதல்:கட்டடத் தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

முதுகுளத்தூா்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பழனிச்சாமி (65). இவா், கன்னிராஜபுரத்தில் கட்டட வேலை பாா்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது வேம்பாா் கிராமத்தைச் சோ்ந்த பேச்சி என்பவரின் இருசக்கர வாகனமும், பழனிச்சாமியின் இருசக்கர வாகனமும் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில் பழனிச்சாமி பலத்த காயமடைந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

விபத்து குறித்து சாயல்குடி காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →