162 நாள்களில் நிறைவடைந்த மகளே என் மருமகளே தொடர்!
மகளே என் மருமகளே தொடர் நிறைவடைந்தது குறித்து...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மகளே என் மருமகளே தொடர் 162 நாள்களுடன் நிறைவடைந்தது.
தங்கமகள், காற்றுக்கென்ன வேலி தொடரை இயக்கிய ஹரிஸ் ஆதித்யா இந்தத் தொடரை இயக்கி வந்த நிலையில், குறுகிய காலத்தில் 6 மாதங்களில் நிறைவடைந்தது.
மகளே என் மருமகளே தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடித்து வந்தனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடித்திருந்தார்.
Advertisement
மருமகள் - மாமியார் இருவருக்கு இடையே நிகழும் அன்பு பரிமாற்றங்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வந்தது.
வர்ஷினி சுரேஷ் மற்றும் அவினாஷ் இருவரையும் ரேஷ்மா பசுபுலேட்டி சேர்த்து வைப்பதுபோல காட்சிகள் படமாக்கப்பட்டு கிளைமேக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மகளே என் மருமகளே தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டு, கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
மகளே என் மருமகளே தொடர் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.