முகப்பு
செய்திகள்

மகளே என் மருமகளே தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

மகளே என் மருமகளே தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக...

Updated On : 4 மார்ச், 2026 at 2:07 PM
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 1:40 PM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகளே என் மருமகளே தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

மகளே என் மருமகளே தொடர் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

Updated On : 4 மார்ச், 2026 at 1:43 PM

இந்தத் தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.

Advertisement

மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியார், மாமியார் மீது அதிக அன்பு கொண்ட மருமகள், இருவருக்கு இடையே நிகழும் சம்பவங்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகளே என் மருமகளே தொடரின் படப்படிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

இது குறித்து நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”படப்பிடிப்பின் கடைசி சில நாள்கள்” எனப் பதிவிட்டு விடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தத் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள், பரபரப்பான திருப்புமுனைக் காட்சிகளுடன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில், 200 எபிசோடுகளைகூட மகளே என் மருமகளே தொடர் தாண்டாமல் நிறைவடையவுள்ளது.

இந்தத் தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

summary

The shooting of the series Magale En Marumagale, which will be aired on Vijay TV, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.