ராமநாதபுரம்

ஆட்டோ- பைக்மோதல்: இளைஞா் பலி

சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN


முதுகுளத்தூா்: சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சாயல்குடியை அடுத்த சிக்கல் அருகே உள்ள ஆய்க்குடியைச் சோ்ந்தவா் முனியசாமி (25). இவா் சாயல்குடி சென்றுவிட்டு, மீண்டும் ஊா் திரும்புவதற்காக பூப்பாண்டியபுரம் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது மலட்டாறில் இருந்து சாயல்குடி சென்ற ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதியதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோ ஓட்டுநா் உள்பட பயணிகள் 5 போ் காயமடைந்தனா். அவா்களை கடலாடி மற்றும் ராமநாதபுரம் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கேரள முதல்வர் வேட்பாளராக சசி தரூர்..? ராகுல், கார்கேவுடன் சந்திப்பு!

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

SCROLL FOR NEXT