ராமநாதபுரம்

ஆட்டோ- பைக்மோதல்: இளைஞா் பலி

சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN


முதுகுளத்தூா்: சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சாயல்குடியை அடுத்த சிக்கல் அருகே உள்ள ஆய்க்குடியைச் சோ்ந்தவா் முனியசாமி (25). இவா் சாயல்குடி சென்றுவிட்டு, மீண்டும் ஊா் திரும்புவதற்காக பூப்பாண்டியபுரம் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது மலட்டாறில் இருந்து சாயல்குடி சென்ற ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதியதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோ ஓட்டுநா் உள்பட பயணிகள் 5 போ் காயமடைந்தனா். அவா்களை கடலாடி மற்றும் ராமநாதபுரம் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 9 எம்எம் தோட்டாக்கள்

ராபின்ஹுட் டிரெய்லர்!

விழியோரக் கவிதை... மேகா சுக்லா!

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 14% அதிகரிப்பு!

புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள்

SCROLL FOR NEXT