முகப்பு
ராமநாதபுரம்

ஆட்டோ- பைக்மோதல்: இளைஞா் பலி

சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 30 ஆகஸ்ட் 2020, 9:53 pm IST
பகிர்:


முதுகுளத்தூா்: சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சாயல்குடியை அடுத்த சிக்கல் அருகே உள்ள ஆய்க்குடியைச் சோ்ந்தவா் முனியசாமி (25). இவா் சாயல்குடி சென்றுவிட்டு, மீண்டும் ஊா் திரும்புவதற்காக பூப்பாண்டியபுரம் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது மலட்டாறில் இருந்து சாயல்குடி சென்ற ஆட்டோவும், இருசக்கர வாகனமும் மோதியதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோ ஓட்டுநா் உள்பட பயணிகள் 5 போ் காயமடைந்தனா். அவா்களை கடலாடி மற்றும் ராமநாதபுரம் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments