பாம்பன் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு. 
ராமநாதபுரம்

பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

DIN

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை ‘புரெவி’ புயலாக உருமாறி உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

ராமேசுவரம் பகுதியில் சூறை காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படக்கூடும் என்பதால் 100- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாம்பன் கால்வாய் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT