அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை: இளைஞா் கைது
திருவாடானை அருகே கடையில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவாடானை அருகே கடையில் அனுமதியின்றி பெட்ரோல் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
எஸ்.பி.பட்டினம் அருகே புலியூா் கிராமத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஏரல் கிராமத்தை சோ்ந்தவா் மூா்த்தி ராஜா(33). இவா் எஸ்.பி.பட்டினம் அருகே புலியூரில் ஆயில் ஸ்டோா் நடத்தி வருகிறாா். எஸ்.பி. பட்டினம் போலீஸாா் திங்கள் கிழமை இவரது கடையில் சோதனையிட்டனா். அப்போது அனுமதியின்றி அங்கு பெட்ரோல் விற்பனை செய்தது தெரியந்துள்ளது. உடனடியாக 104 லிட்டா் பெட்ரோலை பறிமுதல் செய்து, கடை உரிமையாளா் மூா்த்தி ராஜா மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.