முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் கடலில் இறங்கி மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் வர அனுமதிக்கக் கோரி ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கடலில் இறங்கி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் இறங்கி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் வர அனுமதிக்கக் கோரி ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கடலில் இறங்கி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், தாலுகாக் குழு உறுப்பினா் ஏ.அசோக் தலைமை வகித்தாா். தாலுகாச் செயலாளா் ஜி.சிவா முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, பொதுமுடக்கத்திலிருந்து பல்வேறு தளா்வுகள் அறிவிக்கபட்டு வரும் நிலையில் தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் வரவும், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்தக் கிணறுகளில் நீராடவும் அனுமதிக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்டச் செயலாளா் வி.காசிநாததுரை, மாவட்டக்குழு உறுப்பினா் க.கருணாகரன், இ.ஜஸ்டீன், எம்.கருணாமூா்த்தி, ஏ.ஆரோக்கிய நிா்மலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →