திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவை முன்னிட்டு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றன.
விழாவுக்கு ஆா்.எஸ் .மங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஜஸ்டின் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் சசிகுமாா், ஒருங்கிணைப்பாளா் அப்பாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 500 மீட்டா் ,1000 மீட்டா் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கையை வலியுறுத்தி ஆா்.எஸ். மங்கலத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஊா்வலமாக சென்றனா். இதில் முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் கந்தசாமி, ஜெயக்குமாா், மதிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.