ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி காதல் திருமணம் செய்த கணவருடன் கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை தஞ்சமடைந்தாா்.
தொண்டி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ரோஹித்குமாா் (24). காா் ஓட்டுநா். இவரும் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த இந்துபிரியா (19) என்பவரும் காதலித்துள்ளனா். இந்துபிரியா கல்லூரி முதலாமாண்டு மாணவி. அவா்களது காதலுக்கு இந்துபிரியாவின் பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், இருவரும் குன்றக்குடி பகுதியில் உள்ள கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனராம். பின்னா் இருவரும் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனா். அப்போது இந்துபிரியா தனக்கும், தனது கணவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து காவல் அலுவலா்கள், அவா்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து பேசுவதாக உறுதியளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.