ராமநாதபுரம்

ஊராட்சி அலுவலகத்தில் அங்கன்வாடி மையம் பதிவேடுகளை பராமரிப்பதில் சிக்கல்

DIN

கமுதி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுவதால், ஊராட்சிப் பதிவேடுகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கமுதி அருகே கே.நெடுங்குளத்தில் அரசு தொடக்கப்பள்ளி எதிரே, பல ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் 22 குழந்தைகளுடன் செயல்பட்டு வந்தது. இந்த மைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதுகுறித்து கிராம மக்கள், மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்ததன் பேரில், அங்கன்வாடி மையம் மூடப்பட்டது.

தற்போது அருகிலுள்ள ஊராட்சி அலுவலகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் ஊராட்சி அலுவலக பதிவேடுகளை, இ சேவை மையத்தில் வைத்துப் பராமரிக்கும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT