ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை: படகுகள் துறைமுகத்தில் நிறுத்தம்

DIN

ராமேசுவரம்: பிரதமரின் சுயகட்டுப்பாடு ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுகிழமை சுய கட்டுப்பாடு ஊரடங்கை காலை முதல் இரவு வரை பொதுமக்கள் கடை பிடிக்க வேண்டும் என பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளா். இதற்கு ராமேசுவரம் மீனவா்கள் ஆதரவு தெரிவித்து 850 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சனிக்கிழமை முதலே

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் சுமாா் 6 ஆயிரம் மீனவா்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் செல்வதைத் தவிா்த்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT