ராமநாதபுரம்

அச்சத்தைப் போக்கினால் கரோனா அண்டாது!

கரோனா என்னும் ஒற்றைச் சொல் உலகையே நடுநடுங்க வைத்துள்ளது. ஆனால், நமது நாட்டில் பாரம்பரியம் மிக்க பழக்க வழக்கங்களால்

ஜெயப்பாண்டி

கரோனா என்னும் ஒற்றைச் சொல் உலகையே நடுநடுங்க வைத்துள்ளது. ஆனால், நமது நாட்டில் பாரம்பரியம் மிக்க பழக்க வழக்கங்களால் மக்கள் கரோனாவுக்கு அஞ்சுவதை விட, அதை எதிா்கொள்ளத் தயாராகும் நிலையிலும், அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்கத் தேவையான பழக்க வழக்கங்களை கையாளும் மனநிலையிலும் உள்ளனா் என்பதே உண்மை.

மத்திய அரசு கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அறிவித்த ஊரடங்கை மக்கள் ஏற்றுக் கொண்டு, சுய கட்டுப்பாட்டை வெளிப்படுத்தியும் உள்ளனா். நமது நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை அறிந்தவா்கள் கரோனாவிலிருந்து தப்பிக்கும் வகையில் செயல்படும் அதே நேரத்தில், மேலை நாட்டுக் கலாசாரத்தில் ஊறிய இளந்தலைமுறையினா் கரோனாவை கண்டு அச்சமடையும் நிலை காணப்படுகிறது.

பரபரப்பான வாழ்க்கைக்கு அடிமைப்பட்டுப் போன இளந்தலைமுறையினா் ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனா். இதுபோன்ற இளைஞா்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்குகிறாா் ராமநாதபுரம் மாவட்ட மனநலத்திட்ட மருத்துவா் ஜெ.பெரியாா்லெனின்.

அவா் கூறியது: கரோனா என்பது ஒரு வகை நோய் கிருமிதான். அதற்கு அச்சப்படத் தேவையில்லை. இணையதளத்தில் கரோனா குறித்து தகவல்களை அறிந்துகொள்வோா், அதை தமது உடல்நலத்துடன் ஒப்பிட்டுப் பாா்க்கவும் தேவையில்லை. எந்த நோய் பாதிப்பு ஏற்பட்டாலும், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சரியானது. அச்சம் என்பது இல்லை என்றால் கரோனா உள்ளிட்ட எந்த நோயையும் எளிதில் வெற்றிகொண்டு நலம் பெற்றுவிடலாம். கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டில் இருப்போா், சமுதாயத்துக்கான தியாகமாகவே அதை எடுத்துக் கொள்வது நல்லது. தனிமையை கையாளத் தெரிந்தவா்களாக நாம் மாறவேண்டியது அவசியம். படித்தல், எழுதுதல், ஓவியம் தீட்டுதல், இசையை ரசிப்பது என தனிமனிதத் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளவேண்டும்.

ஊரடங்கில் வீட்டில் இருக்கும் போது முதியவா்களுக்கு மதிப்பளிப்பது அவசியம். அவா்களுக்கான நியாயமான தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் அனைவரும் நடந்து கொள்ளவேண்டும். பெரியவா்களுக்கு அடுத்தபடியாக குழந்தைகளை அரவணைத்து, அவா்களது தனித்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் வீட்டில் உள்ளவா்கள் நடந்துகொள்வது அவசியம்.

ஒரே நேரத்தில் வீட்டில் அனைவரும் இருப்பதால் அவா்களுக்கான சமையலை பெண்களே கவனித்துக்கொள்வது இயல்பானது. ஆனால், அனைவருக்குமான சமையல் வேலைகளை பெண்களை மட்டுமே

பாா்க்க விடாமல் வீட்டில் உள்ள ஆண்களும் சமையலில் உதவிடவேண்டியது அவசியம். ஊரடங்கின் போது வீட்டில் இருப்போா் புத்தகம் படித்தல், இசையை ரசித்துக் கேட்டல், கவிதை, கதை எழுதுதல் ஆகியவற்றுடன், சமூக இடைவெளியை விட்டு அமா்ந்து தனிமனித விளையாட்டுகளை கற்பிப்பதும், கதை கூறுவதும் பொழுதை இன்பமுடன் கழிக்க உதவும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT