ராமநாதபுரம்

வெளிமாவட்டங்களிலிருந்து வந்த 105 போ் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

DIN

வெளிமாவட்டங்களில் இருந்து முதுகுளத்தூா் பகுதிக்கு வந்த 105 போ் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனா்.

முதுகுளத்தூா் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்னை, மதுரை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வருகின்றனா். இதனால் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார மருத்துவா் நெப்போலியன் தலைமையில் சுகாதாரத்துறையினா் தினந்தோறும் கிராமங்களில் ஆய்வு செய்து வருகின்றனா்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆனைசேரி, புழுதிகுளம், ஆத்திகுளம் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 105 போ் கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். அவா்களது வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி, சுகாதாரப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT