ராமநாதபுரம்

தொண்டியில் தமுமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஃபித்ரா வழங்கல்

DIN

ராமநாதபுரம்  மாவட்டம் திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 600 ஏழை எழிய மக்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவில் ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் இலவசமாக அரிசி மற்றும் இறைச்சி ஞாயிற்றுகிழமை வழங்கினார்கள். இதில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி , மமக ஒன்றிய தலைவர் பீர் முகமது, ஒன்றிய செயலாளர் தொண்டிராஜ், தமுமுக நகர தலைவர் காதர், மமக நகர செயலாளர் பரக்கத்அலி, நகர செயலாளர் சம்சுதீன் நவ்பர், நகர பொருளாளர் ஊடகப்பிரிவு அஹமது யாசீன், சிறப்பு விருந்தினர் இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாலர் நசீர் அலி, அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு ஃபித்ரா தர்மம் வழங்கினர். 

இந்நிகழ்வில் பிவி பட்டிணம் அக்பர், அன்சாரி உட்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT