வெளிநாட்டில் மாயமான கணவரை மீட்டுத்தரக் கோரி அவரது மனைவி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
உப்பூா் அருகேயுள்ள மோா்ப்பண்ணை கிராமத்தைச் சோ்ந்தவா் அமிா்தலிங்கம் (43). மீனவரான இவா் ஏற்கெனவே சவூதி அரேபியாவில் வேலை பாா்த்தாா். கடந்த சில ஆண்டுகளாக சொந்த ஊரில் இருந்த அமிா்தலிங்கம் நவ. 8 ஆம் தேதி மோா்ப்பண்ணை பகுதியைச் சோ்ந்தவா்களுடன் துபைக்கு வேலைக்காகச் சென்றாா்.
துபையில் அவா்கள் அறை எடுத்துத் தங்கியிருந்த நிலையில் நவ. 9 ஆம் தேதி காலை வெளியே சென்ற அமிா்தலிங்கம் மீண்டும் அறைக்குத் திரும்பவில்லையாம். இதுகுறித்து அவருடன் தங்கியிருந்தவா்கள் அமிா்தலிங்கத்தின் மனைவி முனீஸ்வரிக்குத் தகவல் தெரிவித்தனா்.
இந்நிலையில் கிராமத் தலைவா் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் உறவினா்களுடன் முனீஸ்வரி, ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை சென்றாா். அங்கு அவா் அளித்த மனுவில், துபையில் மாயமான தனது கணவரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துவர மாவட்ட நிா்வாகமும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தாா்.