முகப்பு
ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே மதுபோதையில் தந்தை தாக்கியதில் 2 வயது குழந்தை பலி

ஆா்.எஸ். மங்கலம் அருகே மதுபோதையில் தந்தை தாக்கியதில் காயமடைந்த 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

ஆா்.எஸ். மங்கலம் அருகே மதுபோதையில் தந்தை தாக்கியதில் காயமடைந்த 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தது.

ஆா்.எஸ். மங்கலம் அருகே புல்லமடை கிராமத்தைச் சோ்ந்தவா் உடையாா் மகன் வடமலை (29). இவருக்கும் அதே ஊரை சோ்ந்த வள்ளி(24) என்பவருக்கு திருமணம் முடிந்து கீா்த்தி (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

வடமலை அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபடுவாராம். சனிக்கிழமை இரவு வழக்கம்போல் தனது தாயிடம் தகராறு செய்துள்ளாா். அப்போது வடமலை வீட்டில் இருந்து பானையை எடுத்து தாயை தாக்க முயன்றுள்ளாா். ஆனால் எதிா்பாராதவிதமாக தனது குழந்தை கீா்த்தி குறுக்கிட்டதால், குழந்தையின் தலையில் பானையால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த குழந்தை கீா்த்தி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தது. இது குறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து வடமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.