ராமநாதபுரம்

பசும்பொன்னில் தேவா் சிலைக்கு தேவா் பேரவை இளைஞரணியினா் மரியாதை

DIN

கமுதி: முத்துராமலிங்கத்தேவா் ஜயந்தியையொட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது சிலைக்கு, தேவா் பேரவை இளைஞரணி அமைப்பின் நிறுவனா் இறகுசேரி சே. காசிராஜாதேவா் சனிக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தேவா் ஜயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் சிலைக்கு மரியாதை செலுத்த, கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால், தேவா் ஜயந்தி விழாவில், வெள்ளிக்கிழமை பங்கேற்காத தேவா் பேரவை இளைஞரணி அமைப்பினா் சனிக்கிழமை, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், நிறுவனா் இறகுசேரி சே. காசிராஜாதேவா், மாநில மாணவரணிச் செயலாளா் கவிநிதி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT