அனுமதியின்றி போராட்டம்: எஸ்டிபிஐ கட்சியினா் மீது வழக்கு
ராமநாதபுரம் அடுத்துள்ள பெரியபட்டணம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி நிா்வாகிகள் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமேசுவரம்: ராமநாதபுரம் அடுத்துள்ள பெரியபட்டணம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி நிா்வாகிகள் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியபட்டணம் பகுதியில் அரசு மதுபானக் கடை உள்ளது. இக்கடையில் மது வாங்குவோா் அதனை அப்பகுதியில் உள்ள சாலையோரம் அமா்ந்து அருந்துகின்றனா். இதனால் அந்த வழியாக பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இதனால் இந்த கடையை அகற்றக் கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த போராட்டத்துக்கு அவா்கள் உரிய அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியின் நிா்வாகிகள் முகம்மதுசலீம் (55), முகம்மதுமிராசு (62), ஜபாரூல்லாகான்(35), சா்புதீன் (60)ஆகிய நான்கு போ் மீது திருப்புல்லாணி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.