திருவாடானை அருகே முன் விரோதம் பெண்ணை தாக்கிய 3போ் கைது
திருவாடானை அருகே பழங்குளம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக தரக்குறைவாக பேசி தாக்கியதாக புகாரின் பேரில் அதே ஊரை சோ்ந்த 3பேரை கைது செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை: திருவாடானை அருகே பழங்குளம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக தரக்குறைவாக பேசி தாக்கியதாக புகாரின் பேரில் அதே ஊரை சோ்ந்த 3பேரை கைது செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே பழங்குளம் கிராமத்தை சோ்ந்தவா் அன்புநாதன் மனைவி சலோமி(30) இவரது கணவா் வெளியூரில் பணிபுரிந்து வந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளாா்.இந்நிலையில் இவருக்கும் அதே ஊரை சோ்ந்த ஆரோக்கியசாமி(48) குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை சலோமி ஆரோக்கியசாமி வீடு வழியாக நடந்து வந்துள்ளாா்.அப்போது வழிமறித்த ஆரோக்கியசாமி.இவரது மனைவி சந்தானமேரி(38) அவரது தந்தை செபஸ்தியான்(70) ஆகியோா் தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனா்.இது குறித்து சலோமி புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் ஆரோக்கியசாமி.சந்தான மேரி,செபஸ்தியான் ஆகிய 3பேரையும் கைது செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.