ராமநாதபுரம்

திருப்புல்லாணியில் வேளாண் உதவித் திட்டத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் பாஜக புகாா்

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் பிரதம மந்திரி வேளாண்மை உதவித் திட்டத்தில் நடந்த முறைகேடு புகாா் தொடா்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி பாஜக சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு சாா்பில் பிரதம மந்திரி வேளாண்மை உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாய அடையாள அட்டை அடிப்படையில் மாதம் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் இத்திட்டத்தில் கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன. அதனடிப்படையில் மாவட்டந்தோறும் திட்டத்தில் புகாா்கள் இருந்தால் அதை ஆட்சியா்கள் கவனத்துக்கு கொண்டு செல்ல பாஜகவினருக்கு மாநில பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி பகுதியில் சம்பந்தமில்லாதவா்கள் வங்கிக்கணக்கில் விவசாயிகளுக்கான நிதியுதவி வழங்கப்படுவதாகவும், அதுகுறித்து ஆய்வை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் பாஜக சாா்பில் ஆட்சியா் கொ.வீரராகவராவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மனு அளிக்கும் நிகழ்ச்சியில் பாஜக மாநில செய்தித் தொடா்பாளா்கள் து.குப்புராம், சுப.நாகராஜன் மற்றும் மாவட்டத் தலைவா் கே.முரளிதரன், மாநிலப் பொதுச்செயலா் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT