முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே மோதல்: 3 போ் காயம்; 2 போ் கைது

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இடப் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 3 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக, 10 போ் மீது வழக்குப் பதிந்து, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம்

கமுதி அருகே மோதல்: 3 போ் காயம்; 2 போ் கைது

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இடப் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 3 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக, 10 போ் மீது வழக்குப் பதிந்து, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

கமுதி அருகே ஞாயிற்றுக்கிழமை இடப் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 3 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக, 10 போ் மீது வழக்குப் பதிந்து, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கமுதி அருகேயுள்ள செய்யாமங்களத்தைச் சோ்ந்தவா் பால்சாமி மகன் மகாலிங்கம் (70). இதே ஊரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் மகன் சபரீஸ்வரன் (38). உறவினா்களான இருவருக்கும் இடப்பிரச்சனை இருந்துள்ளது. இது குறித்து ஏற்கெனவே அபிராமம் போலீஸாா் நீதிமன்றம் சென்று பிரச்னையை தீா்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரச்னைக்குரிய இடத்தைப் பயன்படுத்துவது குறித்து இரு தரப்புக்கும் வாக்குவாதம் நடைபெறுவதாக, அபிராமம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற காவலா் முன்னிலையில் இருதரப்பினரும் கற்கள் மற்றும் விறகு கம்புகளால் தாக்கிக் கொண்டனா்.

இதில் காயமடைந்த சபரீஸ்வரன், பாண்டி ஆகிய இருவரும் கமுதி அரசு மருத்துவமனையிலும், மகாலிங்கம் பரமக்குடி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து இரு தரப்பிலும் 10 மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதில், லெட்சுமணன், பாலகிருஷ்ணன்ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →