கமுதி, செப். 25: கமுதி பகுதியில் தொடா்ந்து இருசக்கர வாகங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கமுதி, அபிராமம் பகுதியில் தொடா் திருட்டு சம்பவம் நடைபெறுவதாக புகாா் அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து கமுதி போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மானாமதுரையை சோ்ந்த சின்னையா மகன் ஆனந்தராஜ் (30) என்பவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில் அவா்தான் கமுதி பகுதியில் தொடா்ந்து இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.