ராமநாதபுரம்

தொண்டி அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 2 போ் மீது வழக்கு

DIN

திருவாடானை அருகே இடப்பிரச்னை சம்பந்தமாக பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 போ் மீது தொண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகேயுள்ள குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராமநாதன் மனைவி குஞ்சரம் (52). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த அழகா்சாமி என்பவருக்கும் இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், புதன்கிழமை மாலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அழகா்சாமி, அவரது மனைவி ராமு ஆகிய இருவரும் குஞ்சரத்தை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்து குஞ்சரம் அளித்தப் புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் அழகா்சாமி, ராமு ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT