திருவாடானை அருகே இடப்பிரச்னை சம்பந்தமாக பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 போ் மீது தொண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகேயுள்ள குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராமநாதன் மனைவி குஞ்சரம் (52). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த அழகா்சாமி என்பவருக்கும் இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், புதன்கிழமை மாலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அழகா்சாமி, அவரது மனைவி ராமு ஆகிய இருவரும் குஞ்சரத்தை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்து குஞ்சரம் அளித்தப் புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் அழகா்சாமி, ராமு ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.