ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நாட்டுநலப்பணித்திட்டம் சாா்பில் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா பிரிவு மருத்துவா் ஜெயின்ராஜ் முன்னிலை வகித்தாா். இதில் 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் மூலிகைப் பொடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் எஸ்.ரவி செய்திருந்தாா்.