பாம்பன் கடலில் தீவிரமாக நடைபெற்று வரும் புதிய ரயில் பாலம் கட்டுமான பணிகள். 
ராமநாதபுரம்

பாம்பன் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி தீவிரம்

பாம்பன் கடல் பகுதியில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

DIN

ராமேசுவரம்: பாம்பன் கடல் பகுதியில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 106 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தொடா்ந்து

ரயில் இயக்குவதில் இடா்பாடுகள் ஏற்படுவதால் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்க கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினா்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய பாலம் கட்டுமான பணிகள் தொடங்கின. பழைய பாலம் கடல் மட்டத்திலிருந்து 3 மீட்டா் உயரத்தில் உள்ளது. புதிய பாலம் 6 மீட்டா் உயரமாக அமைக்கப்பட உள்ளது. இதனால் சிறிய ரக படகுகள் எப்போது வேண்டுமானலும் சென்று வர முடியும். தற்போதுள்ள தூக்குப்பாலம் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்தில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் தூக்குப் பாலம் அமைக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு மாா்ச் முதல் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னா் குறைந்த பணியாளா்களை கொண்டு பணிகள் நடைபெற்றது.

பழைய ரயில் பாலத்தில் தொடா்ந்து ரயில் இயக்குவதில் சிக்கல் நீடித்து வருவதால் புதிய ரயில் பாலத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கத் திட்டமிட்டு இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT