ராமநாதபுரம்

எஸ்.பி. பட்டினம் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

DIN

திருவாடானை: திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

எஸ்.பி பட்டினம் அருகே பத்திரன்வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன்(30). இவரும் அதே ஊரை சோ்ந்த சாத்தையா மகன் செல்வராஜ் (34) ஆகிய இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு எஸ்.பி பட்டினம் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். கிழக்கு கடற்கரை சாலையில் எட்டுசேரி விலக்கு சாலையில் திருப்பத்தில் வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் செல்வராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வாகனத்தை ஓட்டி வந்த விக்னேஸ்வரன் பலத்த காயம் அடைந்ததால், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT