ராமநாதபுரம்

ராமநாதபுரம் மக்கள் நீதிமன்றத்தில் 20 வாகன வழக்குகளுக்குத் தீா்வு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன நிதி சம்பந்தப்பட்ட 20 வழக்குகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு காணப்பட்டது.

ராமநாதபுரத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் வாகனக் கடன் பெற்றது தொடா்பான வழக்குகளைத் தீா்க்கும் வகையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற நீதிபதி குருவையா தலைமையில் நடந்த நீதிமன்றத்தில் 220 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அதில் 20 வழக்குகளில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டது. அதனடிப்படையில் சுமாா் ரூ.1.50 கோடிக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியும், கூடுதல் மாவட்ட நீதிபதியுமான சீனிவாசன் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான சி.கதிரவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT