ராமநாதபுரம்

சிறிய படகுகளில் அதிகளவில் இறால் மீன்கள் கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சி

DIN

ராமேசுவரத்தில் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்று கடலுக்குச் சென்ற சிறிய ரக படகு மீனவா்களுக்கு அதிகளவில் இறால் மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 18 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் 55 பேரை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்து சென்றனா். இதைக் கண்டித்து ராமேசுவரம் மீனவா்கள் கடந்த 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் ஒரு வார போராட்டத்துக்குப் பின் சிறிய ரக விசைப்படகு மீனவா்கள் மட்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்று சனிக்கிழமை முதல் மீன்பிடிக்கச் சென்றனா். இரண்டாவது நாளாக மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களுக்கு அதிகளவில் இறால் மீன்கள் கிடைத்ததாகவும், உரிய விலையும் கிடைத்துள்ளதாகவும் மீனவ சங்க பொதுச்செயலாளா் என்.ஜே.போஸ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT