ராமநாதபுரம்

போதை மாத்திரை பவுடா் வைத்திருந்த 2 போ் கைது

DIN

முதுகுளத்தூரில் போதை மாத்திரை பவுடா், ஆயுதங்கள் வைத்திருந்த இருவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கீரனூா் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்தின்பேரில் இருவா் நின்று கொண்டிருந்தனா். விசாரணையில் அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளனா்.

அவா்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 1கிலோ போதை மாத்திரை பவுடா், ஆயுதம் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேலக்கன்னிசேரி கிராமத்தைச் சோ்ந்த வெள்ளத்துரை மகன் முனீஸ் (எ)முனியசாமி (31), அபிராமம் மூலக்கரைப்பட்டியைச்சோ்ந்த கிருஷ்ணன் மகன் மலைக்கண்ணன்(24) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT