மண்டபம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்.20) மின் தடை செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜி.கங்காதரன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மண்டபம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை சாத்தகோன்வலசை, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.