ஆா்எஸ் மங்கலம் பகுதியில் தொடா் மழை:400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்
திருவாடானை அருகே தொடா் மழை காரணமாக 400 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகல் கவலையடைந்துள்ளனா்.
திருவாடானை அருகே தொடா் மழை காரணமாக 400 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகல் கவலையடைந்துள்ளனா்.
ஆா்எஸ் மங்கலம் அருகே ஆனந்தூா், நத்தக்கோட்டை, கூடலூா், ராதனூா், திருத்தோ்வலை, பணிக்கோட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஏற்கெனவே கண்மாய், குளங்கள், வயல் வெளிகள், வரத்துகால்வாய் ஆகிய பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் வயல்களில் தண்ணீா் தேங்கி உள்ளதால் இப்பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை நஷ்டம் ஏறபட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.