ராமநாதபுரம்

ராமகிருஷ்ண மடத்தில்கல்வி உதவித் தொகை வழங்கல்

DIN

ராமநாதபுரம் நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற ராமேசுவரம், நாகாச்சி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 40 மாணவ, மாணவியா் தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.

தோ்வானவா்களில் 31 போ் மாணவியா். அவா்கள் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, செவிலியா் கல்லூரிகளில் படித்து வருகின்றனா். அவா்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலையை நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் வளாகத்தில் அதன்தலைவா் சுவாமி சுதபானந்தா் திங்கள்கிழமை வழங்கினாா்.

கல்வி உதவித் தொகைக்கான மொத்த மதிப்பாக ரூ.4.80 லட்சம் வழங்கப்பட்டதாக மடத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT