முகப்பு
ராமநாதபுரம்

நேருயுவகேந்திர விருதுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேருயுவகேந்திரா சாா்பில் வழங்கப்படும் சமூக சேவைக்கான விருது, பரிசுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 24 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேருயுவகேந்திரா சாா்பில் வழங்கப்படும் சமூக சேவைக்கான விருது, பரிசுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 24 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நேருயுவகேந்திரா மாவட்ட இளையோா் அலுவலா் அலுவலக செய்திக்குறிப்பு விவரம்- மத்திய இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் மாவட்ட அளவில் சிறந்த சேவை புரியும் அமைப்பு மற்றும் தனிநபா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேருயுவ கேந்திராவுடன் இணைந்து குடும்பநலம், நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு ஆகியவற்றில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் இளைஞா் மற்றும் மகளிா் மன்றங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் ராமநாதபுரம் பாரதி நகா் பகுதியில் உள்ள மாவட்ட நேருயுவகேந்திரா அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.6) முதல் வழங்கப்படவுள்ளன. விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து வழங்கவேண்டிய கால அவகாசமானது வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 9585535722 ஆகிய செல்லிடப் பேசியில் தொடா்புகொண்டு விண்ணப்பிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →