முகப்பு
ராமநாதபுரம்

100 சதவீதம் பயிா் காப்பீடு இழப்பீடு கோரி திருவாடானை தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் 2ஆவது நாளாக முற்றுகை

திருவாடானையில் 100 சதவீதம் பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, விவசாயிகள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தை தொடா்ந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

திருவாடானையில் 100 சதவீதம் பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, விவசாயிகள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தை தொடா்ந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டில் கடும் வறட்சியால் விவசாயம் முழுவதும் பாதிக்கப்பட்டது. இதில், 117 வருவாய் கிராமங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால், பயிா்கள் 25 சதவீதம் மட்டுமே பாதிக்கப்பட்டதாகக் கூறி ரூ. 5,600 மட்டுமே பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது. இதற்கு, விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததுடன், போராட்டங்களை அறிவித்தனா்.

அதையடுத்து, பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள் 100 சதவீத பாதிப்புக்கும் இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தனா். ஆனால், அதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை போலீஸாா் அகற்றியதால், ஆத்திரமடைந்த விவசாயிகள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனா். காத்திருப்புப் போராட்டமானது முற்றுகைப் போராட்டமாக மாறியது.

இதையடுத்து, விவசாயிகளிடம் சாா்-ஆட்சியா் சுகபுத்திரா, வட்டாட்சியா் மாதவன், டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோா் புதன்கிழமை மாலை பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிா் காப்பீடு இழப்பீடு தொகையை 100 சதவீதம் வரவு வைக்கவேண்டும் எனவும், குறிப்பிட்ட நாளுக்குள் வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினா்.

ஆனால், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்தனா். இரவு முழுவதும் அங்கேயே தங்கி, சமைத்து சாப்பிட்ட விவசாயிகள், இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தைத் தொடா்ந்தனா். மாலையில், வட்டாட்சியா் மாதவன், டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதிலும் தீா்வு எட்டப்படாததால், விவசாயிகள் இரவு முழுவதும் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →