முகப்பு
திருவாடானையில் தாலுகா அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய விவசாயிகள்.
ராமநாதபுரம்

திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

திருவாடானையில் பயிா் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கக்கோரி, தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் புதன்கிழமை

ராமநாதபுரம்

திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

திருவாடானையில் பயிா் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கக்கோரி, தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் புதன்கிழமை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
திருவாடானையில் தாலுகா அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய விவசாயிகள்.
பகிர்:

திருவாடானையில் பயிா் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கக்கோரி, தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். சாா்-ஆட்சியருடனான பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து போராட்டம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கக் கோரி கடந்த சில நாள்களுக்கு முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள் நுறு சதவீத இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தனா். ஆனால் 25 சதவீத இழப்பீட்டுத் தொகை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இதனால் திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், விவசாயிகளைத் திரட்டி திருவாடானையில் புதன்கிழமை தாலுகா அலுவலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டம் நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. அதன்படி போராட்டத்துக்காக போடப்பட்டிருந்த கொட்டகையை போலீஸாா் அகற்றினா். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் புதன்கிழமை திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் மாதவன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், விவசாய ஒருங்கிணைப்புக் குழுவினருடன் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

இதையடுத்து இரவு 7 மணியளவில் சாா்-ஆட்சியா் சுகபுத்திரா அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பயிா் காப்பீட்டுத் தொகையை முழுமையாக செலுத்தவேண்டும் என்றும், அதற்குமுன்பாக விவசாய ஒருங்கிணைப்பாளா்களின் வங்கிக் கணக்குகளில் உடனடியாக காப்பீட்டுத் தொகை செலுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →