முகப்பு
ராமநாதபுரம்

‘ராமநாதபுரத்தில் பறவை காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவு’

ராமநாதபுரத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என சுகாதாரத்துறை துணை இயக்குநா் டாக்டா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

ராமநாதபுரத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என சுகாதாரத்துறை துணை இயக்குநா் டாக்டா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமலிருக்க கேரள எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் சுகாதாரத்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன் உள்ளிட்டவை வாகனங்களில் நாள்தோறும் கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவு. கேரளத்திலிருந்து நேரடியாக எந்தப் பொருளும் நமக்கு வரவில்லை. கோழி மற்றும் முட்டை, பழங்கள் உள்ளிட்டவைகளை கேரளத்திலிருந்து ஏற்றிவரும் வாகனங்கள் தமிழக எல்லைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன என்றாா்.

பண்ணைகளில் கண்காணிப்பு தீவிரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜப்பான் காடை, நாட்டுக்கோழி வளா்ப்புப் பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், கோழிகள், காடைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கால்நடை வளா்ப்புத்துறை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →