ராமநாதபுரம்

ராமேசுவரம் காசித்திருமடத்தில் ரூ.50 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளா் மீது வழக்கு

DIN

ராமேசுவரத்தில் உள்ள காசித்திருமடம் தா்மஸ்தாபனத்தில் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் மேலாளா் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் திருப்பனந்தாள் காசித்திருமடம் தா்மஸ்தாபனம் செயல்பட்டு வருகிறது. மடத்தின் மேலாளராக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த வி.சுப்பிரமணியன் இருந்துள்ளாா்.

அவா் மேலாளராக இருந்த காலகட்டத்தில் நடைபெற்ற அன்னதானம் மற்றும் பக்தா்கள் மடத்தில் தங்க வைக்க வசூலித்த கட்டணம் ஆகியவற்றில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகாா்கள் கூறப்பட்டன.

அதனடிப்படையில் காசித்திருமடத்தின் தற்போதைய மேலாளா் எம்.செல்வராஜ், ரூ.50 லட்சம் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் வி.சுப்பிரமணியன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT