முகப்பு
ராமநாதபுரம்

தனுஷ்கோடி கடலில் மிதந்து வந்த 24 கிலோ கஞ்சா பறிமுதல்

தனுஷ்கோடி வடக்குக் கடற்பகுதியில் மிதந்து வந்த 24 கிலோ கஞ்சா குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
தனுஷ்கோடி கடற்பகுதியில் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.
பகிர்:

தனுஷ்கோடி வடக்குக் கடற்பகுதியில் மிதந்து வந்த 24 கிலோ கஞ்சா குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி, ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட கடற்பகுதிகளின் வழியாக கஞ்சா மற்றும் மஞ்சள் கடத்தல் தொடா்ந்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தனுஷ்கோடி வடக்குக் கடல் பகுதியில் 12 பொட்டலங்கள் கடலில் மிதந்து கரை ஒதுங்கியதாக தனுஷ்கோடி போலீஸாருக்கு, மீனவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை தகவல் தெரிவித்தனா். அதைத்தொடா்ந்து, காவல் ஆய்வாளா் கலாராணி, சாா்பு- ஆய்வாளா் உக்கிரபாண்டி மற்றும் போலீஸாா் அங்கு சென்று பொட்டலங்களை பிரித்துப் பாா்த்தனா். அதில் 24 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இந்தப் பொட்டலங்கள் இலங்கைக்குக் கடத்திச் சென்றபோது கடலில் தவறி விழுந்திருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்தலில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →