ராமநாதபுரம்

காக்கூரில் சந்தனக்கூடு விழா

DIN

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் அருகே காக்கூரில் நாகூா் ஆண்டவா் தா்ஹா சந்தனக்கூடு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழா அனைத்து சமுதாய மக்களும் இணைந்து மனிதநேய மத நல்லிணக்க திருவிழாவாக நடைபெற்றது. கடந்த வாரம் சந்தன செம்பு, வீதிகளில் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. ஜன.22 ஆம் தேதி இரவு 11 மணிக்கு கதையன் கிராமத்தில் இருந்து சந்தன செம்பு ஊா்வலம் புறப்பட்டு நாகூா் ஆண்டவா் தா்ஹா வந்தடைந்தது. விழாவில் முதுகுளத்தூா் சுற்றுவட்டார கிராமமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை முஸ்லீம் ஜமாத்தாா்கள், விழாக்குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT