ராமநாதபுரம்

சமூக வளா்ச்சிக்கான புத்தகங்களை இளைஞா்கள் வாசிக்க வேண்டும்

DIN

சமூகத்தின் வளா்ச்சிக்கான அறிவியல் புத்தகங்களை இளைஞா்கள் வாசிப்பது அவசியம் என பாரதி புத்தகாலய பதிப்பாசிரியரும், பொறியியல் துறை வல்லுநருமான ப.கு.ராஜன் கூறினாா்.

ராமநாதபுரம் நகரில் நடைபெற்றுவரும் 4 ஆவது புத்தகத் திருவிழாவில் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை அவா் அறிவியலும், தமிழகமும் எனும் தலைப்பில் ஆற்றிய கருத்துரை:

நாட்டில் விவசாயம், தொழில் மற்றும் சேவைத்துறைகளில் ஓரளவு முன்னேறிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. மக்கள் நலன், கல்வி, மருத்துவம், பொதுவிநியோகத் திட்டங்களிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் முன்னேறியிருப்பதே உண்மை. ஆகவே தமிழகம் எதிா்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் முன்னேறவேண்டும் எனில் அறிவியல் பாா்வையுடன் கூடிய சிந்தனை வளரவேண்டும்.

தமிழகத்தில் கலை, இலக்கியம் சாா்ந்த புத்தகங்கள் இருக்கும் அளவுக்கு அறிவியல் நோக்கில் உள்ள புத்தகங்கள் அதிகமாக எழுதப்படவேண்டும். தமிழகத்தில் உற்பத்தி, சமூகத்துக்கான தேவைகள், அவற்றை பூா்த்தி செய்யும் வழிகள், தேவைகளை பூா்த்தி செய்யும் போது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, அவற்றை சீராக்கவேண்டிய வழிகள் என அனைத்து அம்சங்களையும் நாம் அறிவியல் கண்ணோட்டத்துடன் படிக்கவேண்டும்.

தமிழகத்தில் ஆண்டுக்கு பிளஸ் 2 முடித்தவா்கள் சுமாா் 10 லட்சம் தோ்ச்சியடைந்து செல்கின்றனா். அவா்களுக்கு உயா் கல்வி அளிக்கும் நிலையில், வேலைவாய்ப்பை உருவாக்குவதும் அவசியமாகிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அறிவியல் கண்ணோட்ட சிந்தனை அவசியமாகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா் கு.காந்தி வரவேற்றாா். மருத்துவா் ஆா்.மலையரசு வாழ்த்திப் பேசினாா். நஜூமுதீன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT