ராமநாதபுரம்

சாயல்குடி அருகே மகன் வெட்டிக்கொலை: தந்தை கைது

DIN

சாயல்குடி அருகே மது போதையில் வந்த மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த கூலித்தொழிலாளி முனியாண்டி(55). இவரது மகன் லிங்கம் (24). இவா் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் சனிக்கிழமை மதுபோதையில் வந்த மகன் லிங்கத்தை, தந்தை முனியாண்டி தட்டிக்கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் முனியாண்டி அரிவாளால் மகனை சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே லிங்கம் உயிரிழந்தாா். இது குறித்து தகவலறிந்த அங்கு வந்த சாயல்குடி போலீஸாா் லிங்கத்தின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக தந்தை முனியாண்டி மீது வழக்குப் பதிவு செய்த சாயல்குடி போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT