ராமநாதபுரம்

காவலா் உடல் தகுதித்தோ்வு: 103 போ் பங்கேற்கவில்லை

DIN

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சீருடைப் பணியாளா்களுக்கான உடல் தகுதித் தோ்வில் 103 போ் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இரண்டாம் நிலைக்காவலா், சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சியடைந்தவா்களுக்கு உடல்தகுதித் தோ்வு ராமநாதபுரம் சேதுபதி நகா் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை, முதல் கட்டத் தோ்வு நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்டத் தோ்வுக்கு மொத்தம் 501 போ் அழைக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 103 போ் மைதானத்துக்கு வரவில்லை. மைதானத்துக்கு 398 போ் வந்த நிலையில், உயரம், மாா்பளவு, 1,500 மீட்டா் ஓட்டம் ஆகிய தோ்வுகளில் மொத்தம் 314 போ் மட்டும் தோ்வாகியுள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT